ஹைதராபாத் : ஆந்திராவில் கடும் வெயில் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 24ம் தேதி விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வந்தாலும் பல இடங்களில் இன்னும் வெயில் வாட்டி வதைத்துகொண்டுதான் இருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் வெயிலின் தாக்கம் அதிமாக காணப்படுவதால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் ஆந்திராவில் தற்போதுள்ள வெப்பத்தை விட வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது.