புதுடெல்லி: ஐஜிஐ விமான நிலையத்தில், தோட்டாக்களுடன் நுழைந்த பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ செல்ல, ஆர் சிங் என்பவர் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்(ஐஜிஐ) வந்திருந்தார். அவரது உடமைகளை எக்ஸ் ரே மெஷின் உதவியுடன் சோதனையிட்டபோது, அதில் 5 தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், சட்டவிரோதமா ஆயுதம் கடத்தியதற்காக அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.