குட்டையில் மண் அள்ளியதால் சிறுமிகள் பரிதாப சாவு: அதிமுக பிரமுகர்கள் கைது

மயிலாடுதுறை : மியலாடுதுறை அருகே குட்டையில் மணல் சரிந்து 2 சிறுமிகள் இறப்புக்கு காரணமான அதிமுக பிரமுகர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். நாகை மாவட்டம் குத்தாலம் அருகே ராஜகோபாலபுரம் ராஜாகாலனி கீழத்தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது வீட்டுக்கு தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஆனைக்காரன்பாளையத்தை சேர்ந்த உறவினர்களான தேவேந்திரன் மகள் சியாமளா (7), சுதாகர் மகள் வர்ஷினி (10) ஆகியோர் கடந்த 17ம் தேதி வந்தனர். அன்று மதியம் அருகில் உள்ள குத்தாலம் பேரூராட்சிக்கு சொந்தமான குட்டையில் விளையாடி கொண்டிருந்தனர்.

அந்த குட்டையில் மணல் அள்ளியதால் ஆபத்தை விளைவிக்கக்கூடிய பள்ளங்கள் இருந்தது.

இந்நிலையில் விளையாடி கொண்டிருந்த 2 சிறுமிகள் மீது மணல் சரிந்து விழுந்தது. அடுத்த சில மணி நேரங்களில் 2 சிறுமிகளும் பலியாகினர். இதைதொடர்ந்து பேரூராட்சி குளத்தில் அனுமதியின்றி மணல் அள்ளியது, 2 சிறுமிகளின்  இறப்புக்கு காரணமாக இருந்ததாக கூறி அதிமுக கிளை செயலாளர் சண்முகம் (58), கூட்டுறவு சங்க இயக்குனர் மணிவாசகம் (57) ஆகியோரை குத்தாலம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: