ராமேஸ்வரம்: பாக் ஜலசந்தி கடல் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்களுக்கு அனுமதி டோக்கன் வழங்க மறுத்து விட்டனர். டோக்கன் இல்லாமல் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நேற்று மீனவர்கள் கடலுக்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.தடைக்காலம் முடிந்த நிலையில் கடலுக்கு சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முன்தினம் கணிசமான அளவு இறால் மீன்களோடு கரை திரும்பினர். நேற்று முன்தினம் கடலுக்கு சென்ற பாம்பன் மீனவர்களும் அதிகளவு மீன்பாடுகளுடன் நேற்று காலை கரை திரும்பினர். நேற்று அதிகாலை விசைப்படகு மீனவர்கள், அனுமதி டோக்கன் பெறுவதற்காக ராமேஸ்வரம் மீன்வளத்துறை அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் பலத்த காற்று வீசுவதால், கடலுக்கு செல்ல அனுமதியில்லை என்று கூறி அதிகாரிகள் அனுமதி டோக்கன் வழங்க மறுத்து விட்டனர். இதனால் அதிகாரிகளுக்கும், மீனவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.