திருச்சி: திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏ ஒருவர் மணல் கொள்ளை உள்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு ரூ.1,000 கோடி வரை கொள்ளையடித்து விட்டதாக முன்னாள் எம்எல்ஏவின் உரையாடல் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவுகிறது.திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஒருவர் (தற்போதும் அதிமுகவில் தான் இருக்கிறார்), தினகரன் அணி நிர்வாகி ஒருவரிடம் போனில் பேசும் உரையாடல் வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது. அதில் முன்னாள் எம்எல்ஏ கூறும்போது, ‘நான் சிபாரிசு செய்யும் ஆட்களுக்கு 15 பசுமை வீடுகள் ஒதுக்க வேண்டும் என கேட்டு அனுமதி வாங்கி வந்து விட்டேன். தற்போதைய எம்எல்ஏ, கட்சிகாரர்களுடன் சேர்ந்து ரூ.1000 கோடி வரை கொள்ளையடித்து விட்டார்.