உலக கோப்பை ஜி பிரிவில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் துனிசியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் பங்கேற்ற இங்கிலாந்து வீரர்களுக்கு வோல்கோகிராடில் உள்ள ‘த்ரீ லயன்ஸ்’ ஓட்டலில் அறைகள் புக் செய்யப்பட்டு இருந்தது. ஓட்டலை சுற்றிலும் கொசுக்கள் படையெடுத்ததால், அவற்றை ஒழிப்பதற்காக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஓல்கா ஆறு மற்றும் மிதமான தட்பவெப்ப நிலை காரணமாக வோல்கோகார்டில் ரத்தத்தை உறிஞ்சி குடிக்கும் ஆர்க்டிக் கொசுத் தொல்லை அதிகம். இவற்றை விரட்டுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், மே - ஜூன் மாதத்தில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.