டெல்லி ஆளுநர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் அமைச்சர் உடல்நலம் பாதிப்பு மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி: டெல்லியில் துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டெல்லியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடக்கோரியும், வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் திட்டத்திற்கு துணை நிலை ஆளுநர் அனுமதிக்க கோரியும் அவரது அலுவலகத்தில் முதல்வர் ெகஜ்ரிவால்,துணை முதல்வர் சிசோடியா, அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 இதில் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். சுமார் ஒரு வாரமாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு நேற்றிரவு திடீரென மயக்கம் ஏற்பட்டு உடல்நலம் பாதித்தது. இதையடுத்து அவர் லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம்

Related Stories: