புதுடெல்லி: டெல்லியில் துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டெல்லியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடக்கோரியும், வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் திட்டத்திற்கு துணை நிலை ஆளுநர் அனுமதிக்க கோரியும் அவரது அலுவலகத்தில் முதல்வர் ெகஜ்ரிவால்,துணை முதல்வர் சிசோடியா, அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.