பெரியபாளையம் முதல் ஜனப்பன்சத்திரம் வரை சீரமைத்த 2 மாதத்தில் குண்டும் குழியுமாக மாறிய தார் சாலை

ஊத்துக்கோட்டை: சென்னை  – திருப்பதி நெடுஞ்சாலையில் ஜனப்பன்சத்திரம் கூட்டுச்சாலையில் இருந்து பெரியபாளையம் வரை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தார்ச்சாலை போடப்பட்டது.  இந்த சாலையில் சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதி, புத்தூர், கர்னூல் ஆகிய பகுதிகளுக்கும், இதேபோல் ஆந்திராவில் இருந்து சென்னைக்கும் கார் பஸ்,  வேன், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்று வருகிறது. இதனால், இந்த சாலையில்  பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டு குண்டும் குழியுமாக மாறியது. கடந்த 2 மாதங்களுக்கு ஜனப்பன்சத்திரம் முதல் புதிதாக சாலை போடப்பட்டது. ஆனால், இந்த சாலையில் ஒருநாளைக்கு 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்கின்றன. இதனால், 2 மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட சாலையும் அரியப்பாக்கம், ஆத்துப்பாக்கம், கன்னிகைபேர் என ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. மேலும், சாலை விரிசல் ஏற்பட்டு பெயர்ந்துள்ளது. எனவே, மீண்டும் தரமான சாலை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்….

The post பெரியபாளையம் முதல் ஜனப்பன்சத்திரம் வரை சீரமைத்த 2 மாதத்தில் குண்டும் குழியுமாக மாறிய தார் சாலை appeared first on Dinakaran.

Related Stories: