அருண் ஜெட்லி சாதாரண அறைக்கு மாற்றம்

புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு (65) சிறுநீரக பிரச்னை ஏற்பட்டது. அவருக்கு சிறுநீரகம் தானம் அளிக்க தூரத்து உறவுக்காரப் பெண் ஒருவர் முன்வந்தார். இதையடுத்து, அருண் ஜெட்லி கடந்த 14ம் தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். எய்ம்ஸ் மற்றும் அப்பல்லோ மருத்துவமனைகளின் 20 மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தது. தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து இருதய மற்றும் நரம்பியல் மையத்தில் உள்ள சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் நன்கு குணமடைந்து வருவதாக எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: