டெல்லி : தூத்துக்குடி மக்கள் அமைதி திரும்ப ஒத்துழைப்பு தர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தூத்துக்குடி போராட்டத்தின் போது நிகழ்ந்த உயிரிழப்புகள் குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி மிகவும் வேதனை அடைந்ததாக அவர் கூறினார்.