திருச்சி: திருச்சியில் நேற்றிரவு காற்றுடன் மழை பெய்தது. இதனால் பெரும்பாலான இடங்களில் மின்வினியோகம் தடைபட்டது. தமிழகம் மற்றும் புதுவையில் வெப்ப சலனம் காரணமாக பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 21ம் தேதி மாலை பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் கத்திரி வெயிலின் தாக்கத்தால் அவதியடைந்த வந்து மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் மற்ற நாட்களை காட்டிலும் அதிகமாக வாட்டிவதைத்தது.