தங்கவயல்: சட்டபேரவை தேர்தலில் தங்கவயல் தொகுதியில் தோல்வி ஏற்பட்டது குறித்து பா.ஜ. நிர்வாகிகளுடன் முன்னாள் எம்.எல்.ஏ. ஒய். சம்பங்கி ஆலோசனை நடத்தினார். மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டபேரவை தேர்தலில் தங்கவயல் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஒய். சம்பங்கி மகள் அஸ்வினி போட்டியிட்டார். இவர் காங்கிரஸ் வேட்பாளர் ரூபாசசிதரிடம் தோல்வியடைந்தார். கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ கோட்டையாக இருந்த தங்கவயல் தொகுதி தற்போது காங்கிரஸ் கேட்டையாகி விட்டது. இதனால் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஒய்.சம்பங்கி ஆலோசனை நடத்தினார்.