காசிமேடு: புது வண்ணாரப் பேட்டையில் கன்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கிய சாப்ட்வேர் இன்ஜினியர் உடல் நசுங்கி பலியானார்.
திருவொற்றியூரை சேர்ந்தவர் ஜாவீத் (30). சாப்ட்வேர் இன்ஜினியர். நேற்று மாலை ஜாவீத், வேலை முடிந்து பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். புதுவண்ணாரப்பேட்டை, செரியன் நகர் அருகே சென்று கொண்டிருந்தார். முன்னால், சென்னை துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றி கொண்டு, மதுரவாயல் நோக்கி கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை முந்தி செல்ல முயன்றபோது, நிலைதடுமாறி அவர், லாரியின் பக்கவாட்டில் விழுந்தார்.