புனே: ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு அவரது மகள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய காட்சி பார்ப்போரை கலங்க வைத்துள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநிலம் குல்காவில் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி தீவிரவாதிகளுடனான சண்டையின் போது இரு குண்டுகள் துளைத்து ராணுவ வீரர் தீபக் நெய்வால் என்பவர் காயமடைந்தார். மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.