டாங்கே: தென் கொரியாவில் நடைபெற்ற 5வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் பைனலில், நடப்பு சாம்பியனான இந்திய அணி போராடி தோற்று 2வது இடம் பிடித்தது. மொத்தம் 5 நாடுகள் பங்கேற்ற இந்த தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டியில் இந்தியா - தென் கொரியா நேற்று மோதின. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் உற்சாகமாக விளையாடிய தென் கொரிய வீராங்கனைகள், இந்திய கோல் பகுதியை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர். ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் அந்த அணியின் யங்சில் லீ அபாரமாக கோல் அடித்து 1-0 என முன்னிலை ஏற்படுத்தினர்.