சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் 1,310 சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு ரூ.3.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகள், நிறுவனங்களில் 2 வாரங்களில் மேற்கொண்ட கள ஆய்வுகளில் 1,310 சட்டவிரோத இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி, டிச.19 முதல் டிச.31 வரை குடியிருப்புகள், நிறுவனங்களில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் கழிவுநீரை வெளியேற்றுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் மீறினால் கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது….
The post சென்னை மாநகராட்சி பகுதிகளில் 1,310 சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு ரூ.3.12 லட்சம் அபராதம் விதிப்பு appeared first on Dinakaran.