புதுடெல்லி: ‘ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் அரசு நிர்ணயம் செய்த கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறதா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று தமிழக அரசின் கட்டண நிர்ணய குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவ கல்லூரிகளில் பயிலும் மருத்துவ மாணவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வி கட்டணத்தையே சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் பயிலும் மருத்துவ மாணவர்களுக்கும் நிர்ணயிக்க வேண்டும்சட்ட விரோதமாக வசூலிக்கப்பட்ட அதிக தொகையை திரும்ப வழங்க வேண்டும் என உத்தவிடக் கோரி, மருத்துவ மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, யுயு.லலித் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், 'மாணவர்கள் படிப்பிற்காக ஆண்டுக்கு ரூ.5 முதல் 6 லட்சம் வரை கல்லூரி நிர்வாகத்திடம் கட்டணம் தரப்படுகிறது.