கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூரில் லாரிகளில் மணல் அள்ளப்படுகிறது. ஆனால் மாட்டு வண்டிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. எங்களுக்கும் அனுமதி தர வேண்டும் என்று மாட்டு வண்டி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் பல கட்ட போராட்டங்களையும் நடத்தினர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆற்றில் மணல் அள்ள அனுமதி அளிப்பது தொடர்பாக திங்கட்கிழமை (நேற்று) முடிவு எடுக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் நேற்றும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.