பொருட்கள் மட்டுமில்ல; பீரோவையே தூக்கிட்டு போவாங்க கொள்ளை அடிக்குறதுலேயே இது புது டிசைனா இருக்கே…

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே பெருஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் கமலா. கணவர் வேலு இறந்த நிலையில் தனியாக வசித்து வருகிறார். இவர் கடந்த 21ம் தேதி தேனியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளையர்கள், நேற்று முன்தினம் இரவு முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். வீட்டில் இருந்த பீரோவை உடைத்தால் சத்தம் கேட்டு மாட்டிக்கொள்வோம் என எண்ணிய திருடர்கள், அதை அப்படியே   தூக்கிக் கொண்டு அருகே உள்ள கண்மாய் கரைக்கு கொண்டு சென்றனர். அங்கு பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.15 ஆயிரத்தை எடுத்துச் சென்றனர். நேற்று காலை பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் கொடுத்த தகவலின்படி போலீசார் வீட்டில் சோதனையிட்டனர். அப்போது, பீரோ காணவில்லை. அதை தேடிய போது அருகில் கண்மாய் கரையில் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். …

The post  பொருட்கள் மட்டுமில்ல; பீரோவையே தூக்கிட்டு போவாங்க கொள்ளை அடிக்குறதுலேயே இது புது டிசைனா இருக்கே… appeared first on Dinakaran.

Related Stories: