ஸ்பைஸ்ஜெட் விமானம் தரையிறங்கும்போது புகை வந்ததால் பரபரப்பு!

பெங்களூரு: கோயம்புத்தூரில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் கேபின் அறைக்குள் புகை மூட்டம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெங்களூரில் தரை இறங்கும்போது விமானத்தில் இருந்தவர்கள் புகை மூட்டத்தை கவனித்துள்ளனர்.

ஆயினும் விமானம் பத்திரமாக பெங்களூரில் தரையிறக்கப்பட்டதாகவும், பயணிகளுக்கு எந்த வித பிரச்சினையும் ஏற்படவில்லை என்றும் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தை அவசரமாகத் தரையிறக்க வேண்டும் என்று விமானிகள் கோரவில்லை என்றும் ஸ்பைஸ்ஜெட் விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: