முன்னதாக ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதற்கான சாத்திய கூறுகள் தொடர்பான பரிந்துரையை முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்தது. அந்த பரிந்துரையில் அரசமைப்பு சட்டத்தின் 3 பிரிவுகளில் மற்றும் 12 உப பிரிவுகளில் திருத்தம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் சட்டப்பேரவைகள் உள்ள யூனியன் பிரதேசங்கள் குறித்த சட்டங்களிலும் திருத்தம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது. ராம்நாத் குழுவின் அறிக்கையில் ஒரே நாடு ஒரே தேர்தலை 2 கட்டமாக நடத்த பரிந்துரைக்கப்பட்டது. முதல் கட்டத்தில் மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களை நடத்த வேண்டும் என்றும் அடுத்த 100 நாட்களுக்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
The post ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஒன்றிய அரசு 3 சட்டங்களை கொண்டு வருவதற்கு திட்டம்!! appeared first on Dinakaran.