இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!

இத்தாலியில் உள்ள எட்னா எரிமலை வெடித்து நெருப்பு குழம்பை வெளியிட்டு வருகின்றது. ஐரோப்பிய கண்டத்தில் உள்ள 3 பெரிய எரிமலைகளில் ஒன்றான எட்னா, இத்தாலி நாட்டில் உள்ள சிசிலி பகுதியில் அமைந்துள்ளது. கடந்த மாத இறுதியில் கரும்புகையை வெளியிட்டு வந்த எட்னாவில் தற்போது சீற்றம் உச்சத்தை அடைந்துள்ளது. எரிமலையின் முகப்பு பகுதியில் இருந்து லாவா எனப்படும் நெருப்பு குழம்பும், சாம்பலும் வெளியாகி வருகிறது. தற்போது இரவு நேரங்களில் எரிமலையில் இருந்து லாவா நெருப்பு குழம்பாக பாய்வதை தூரத்தில் இருந்தபடி சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

The post இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: