25 கிலோ மாவா பறிமுதல்

பெரம்பூர்,: வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் மெயின் ரோடு அசோக் பில்லர் அருகே வியாசர்பாடி போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பைக்கில் வந்தவரை மடக்கி, அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது, அதில் மாவா தயாரிக்க பயன்படுத்தப்படும் ஜர்தா என்ற போதைப்பொருள் இருந்தது தெரிந்தது. விசாரணையில் அவர், சவுகார்பேட்டை சுந்தர முதலி தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (35) என்பதும், வியாசர்பாடி பகுதியில் உள்ள கடைகளுக்கு மாவா சப்ளை செய்ததும் தெரிந்தது. பின்னர், அவரது வீட்டை சோதனை செய்தபோது 25 கிலோ மாவா மற்றும் மூலப் பொருட்கள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, சதீஷ்குமாரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்….

The post 25 கிலோ மாவா பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: