நண்பர்கள் இடையே மோதல்: வாலிபர் சரமாரி குத்திக் கொலை

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் அடுத்த வாரணவாசியை சேர்ந்தவர் சந்துரு (26). தனியார் தொழிற்சாலை ஊழியர். இவரது நண்பர், அதே பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (25). வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வருவார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வாரணவாசி பஸ் நிறுத்ததில் சந்துரு, தினேஷ் ஆகியோர் நின்றிருந்தனர். அப்போது, அவர்களுக்குள்தகராறு ஏற்பட்டு, 2 பேரும் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதை பார்த்தஅப்பகுதி மக்கள், அவர்களை தடுத்து வீட்டுக்கு அனுப்பினர். அங்கிருந்து வீடு திரும்பிய சந்துரு, வெளியே கட்டிலில் தூங்கினார். இரவு அங்கு வந்த தினேஷ், கட்டிலில் தூங்கி கொண்டிருந்த சந்துருவை, மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்து, அலறி துடித்தார். சந்துருவின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். உடனே தினேஷ் அங்கிருந்து தப்பிவிட்டார்.   இதையடுத்து, சந்துருவை மீட்டு, ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்துரு இறந்தார்.புகாரின்படி ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய தினேஷை வலைவீசி தேடினர். இந்தவேளையில், போலீசார், தினேஷை கைது செய்யவில்லை என கூறி, பொதுமக்கள் வாரணவாசி பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடு பட்டனர். இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அவர்களிடம் சமரசம் பேசி, விரைவில் கைது செய்வதாக உறுதியளித் தனர். இதையடுத்து போலீசார், அதே பகுதியில் பதுங்கி இருந்த சந்துருவை நேற்று இரவு கைது செய்தனர்….

The post நண்பர்கள் இடையே மோதல்: வாலிபர் சரமாரி குத்திக் கொலை appeared first on Dinakaran.

Related Stories: