செட்டிநாட்டு பரங்கிக்காய் கூட்டி அவித்தல்

செய்முறை:இது தாளிக்கவோ, எண்ணெயில் வதக்கவோ, தேவையில்லை, எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கொதிக்க வைத்து பரிமாறவும், இது கெட்டியாக இருக்க வேண்டும் அப்போதுதான் சுவை நன்றாக இருக்கும். ஒரு பாத்திரத்தில் பரங்கிக்காய், வெங்காயம், பூண்டு, நறுக்கிய தக்காளி, உப்பு, புளி தண்ணீர், மிளகாய் தூள் மஞ்சள் தூள், சோம்பு, சீராகம், கறிவேப்பிலை, எண்ணெய் மற்றும், தண்ணீர் 1 கோப்பை எல்லாம் சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.(பரங்கிக்காய் சீக்கிரம் வெந்துவிடும் அளவாக தண்ணீர் சேர்த்தால் போதுமானது) தண்ணீர் அதிகம் தேவியில்லை இது சற்று சேர்ந்தார்ப்போல் இருக்க வேண்டும் நீர்க இருக்க கூடாது. நன்கு வெந்து குழம்பு சுண்டி வரும்போது வெல்லம் சேர்த்து மிதமான தீயில் ஒரு நிமிடம் வைத்து இறக்கி பரிமாறலாம்.;

The post செட்டிநாட்டு பரங்கிக்காய் கூட்டி அவித்தல் appeared first on Dinakaran.

Related Stories: