மும்பை: உலக அழகி பட்டம் வென்று, தமிழில் விஜய் ஜோடியாக ‘தமிழன்’ என்ற படத்தில் ஹீரோயினாகவும், பாடகியாகவும் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. பிறகு பாலிவுட் டிலும், ஹாலிவுட்டிலும் முன்னணி ஹீரோ
யினாக மாறி, இந்தியாவிலேயே அதிகமான சம்பளம் வாங்கி வரும் நடிகையாக புகழ்பெற்றுள்ளார். தற்போது எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் ‘வாரணாசி’ என்ற பான் இந்தியா படத்தில் மகேஷ் பாபு ஜோடியாக நடித்து வருகிறார்.
கடந்த 2023ல் ஒளிபரப்பாகி இருந்த ‘சிட்டாடல்’ என்ற வெப் தொடரில் பிரியங்கா சோப்ரா, ரிச்சர்ட் மேடன், ஸ்டான்லி டுச்சி நடித்தனர். ஸ்பை திரில்லர் கதை கொண்ட இதை நியூட்டன் தாமஸ், ஜெஸிக்கா யு இணைந்து இயக்கினர். இத்தொடர் வெற்றிபெற்றதை தொடர்ந்து அடுத்த சீசன் உருவானது. இதை ஹாலிவுட் இயக்குனர்கள் ரூசோ சகோதரர்கள் தயாரித்துள்ளனர். 7 எபிசோடுகள் கொண்ட இந்த தொடர், அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது.
இதில் பிரியங்கா சோப்ரா, ரிச்சர்ட் மேடன் நடித்துள்ளனர். இந்த வெப்தொடரின் கதையையும், முக்கிய திருப்பங்களையும் இணைய தளங்களில் பகிரக்கூடாது என்று ரூசோ சகோதரர்களும், பிரியங்கா சோப்ராவும் கட்டுப்பாடு விதித்துள்ளனர். பிரியங்கா சோப்ரா கூறுகையில், ‘இந்த தொடர் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக, அனைவரும் கடினமாக உழைத்துள்ளோம். கதையை பற்றிய சஸ்பென்ஸ் திரையில் வெளிப்படும்போது மட்டுமே சுவாரஸ்யம் குறையாமல் இருக்கும். எனவே, அதுபற்றி எதையும் வெளியே கசியவிடாதீர்கள்’ என்றார்.
