மேற்கு வங்கத்தில் பரபரப்பு ஒன்றிய அமைச்சர் கைதா?

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பார்கனாஸ் மாவட்டத்தில் பான்கான் மக்களவை தொகுதி உறுப்பினர் சாந்தனு தாகூர். துறைமுகம், கப்பல், நீர்வழித்துறை இணை அமைச்சரான இவர், நேற்று தனது ஆதரவாளர்களுடன் பிராட்டியில் உள்ள கோயிலுக்கு சென்றிருந்தார். அப்போது பிராட்டியில் ஷாகின் சம்மன் யாத்திரைக்காக திரண்டு இருந்த பாஜவினரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக ஒன்றிய இணை அமைச்சர் சாந்தனு, ‘‘ கோயிலில் பூஜை செய்வதற்காக சென்றிருந்த போது போலீசார் என்னை கைது செய்தனர்” என்றார். ஆனால் போலீசார், ‘‘சட்டவிரோதமாக திரண்ட பாஜ தொண்டர்களை கைது செய்தோம். அமைச்சரை கைது செய்யவில்லை. அவராக வந்து காவல் வாகனத்தில் ஏறினார்” என்றனர். …

The post மேற்கு வங்கத்தில் பரபரப்பு ஒன்றிய அமைச்சர் கைதா? appeared first on Dinakaran.

Related Stories: