இங்கிலாந்துடன் 2வது டெஸ்ட் இந்தியா 364 ரன் குவிப்பு

லண்டன்: இங்கிலாந்து அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், இந்தியா 364 ரன் குவித்து ஆல் அவுட்டானது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 276 ரன் எடுத்திருந்தது. ரோகித் 83, புஜாரா 23, கேப்டன் கோஹ்லி 42 ரன்னில் ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடி சதம் அடித்த கே.எல்.ராகுல் 127 ரன், ரகானே 1 ரன்னுடன் நேற்று 2வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். ராகுல் 129 ரன் எடுத்து (250 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்) ராபின்சன் வேகத்தில் சிப்லி வசம் பிடிபட்டார். ரகானே மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, பன்ட் – ஜடேஜா ஜோடி 6வது விக்கெட்டுக்கு 49 ரன் சேர்த்தது. பன்ட் 37 ரன் எடுத்து (58 பந்து, 5 பவுண்டரி) மார்க் வுட் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷமி டக் அவுட்டானார். ஒரு முனையில் ஜடேஜா உறுதியுடன் போராட… ஷமி (0), இஷாந்த் (8), பும்ரா (0) ஏமாற்றமளித்தனர். ஜடேஜா 40 ரன் எடுத்து (120 பந்து, 3 பவுண்டரி) விக்கெட்டை பறிகொடுக்க, இந்தியா முதல் இன்னிங்சில் 364 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (126.1 ஓவர்). சிராஜ் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார், இங்கிலாந்து பந்துவீச்சில் அனுபவ வேகம் ஆண்டர்சன் 29 ஓவரில் 7 மெய்டன் உள்பட 62 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ராபின்சன், மார்க் வுட் தலா 2, மொயீன் அலி 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடியது….

The post இங்கிலாந்துடன் 2வது டெஸ்ட் இந்தியா 364 ரன் குவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: