செல்போன் திருடனுக்கு உடந்தை புழல் சிறைக் காவலர் உட்பட 3 பேர் கைது

சென்னை: அமைந்தகரை ஷெனாய் நகர் அடுத்த புல்லா அவன்யூ பகுதியை சேர்ந்த விக்னேஷ் (27), தனது சென்போன் திருடுபோனதாக கடந்த 13ம் தேதி அமைந்தகரை போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், பாரிமுனையை சேர்ந்த ரமேஷிடம் அந்த செல்போன் இருப்பது தெரிந்தது. அவரை கைது செய்து விசாரித்தனர். அதில், அவர் புழல் சிறையில் காவலராக பணியாற்றி வருவதும், கடந்த 3 மாதத்திற்கு முன்பு, செல்போன் திருட்டு வழக்கு தொடர்பாக, புழல் சிறையில் அடைக்கப்பட்ட அண்ணாசாலையை சேர்ந்த சிபி  (29) என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும், சிறையில் இருந்து வெளியில் வந்த சிபி, செல்போன்களை திருடி, தனது நண்பர்  தண்டையார்பேட்டையை சேர்ந்த கார்த்திக் (32) மூலம் பர்மா பஜாரில் விற்று பணமாக்கியதும், அதை மூவரும் பங்கிட்டு கொண்டதும் தெரிய வந்தது. இதையடுத்து, ரமேஷ், சிபி, கார்த்திக் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20  செல்போன்கள், பைக் பறிமுதல் செய்யப்பட்டது….

The post செல்போன் திருடனுக்கு உடந்தை புழல் சிறைக் காவலர் உட்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: