இந்தியா இரண்டாவது நாளாக ராஜஸ்தான் மாநிலம் பிகானிரியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 4.8-ஆக பதிவு Jul 22, 2021 ராஜஸ்தான் பிகானேரி, ராஜஸ்தான் தின மலர் ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் பிகானிரியில் கடந்த இரண்டு நாட்களில் இரண்டாவது முறையாக இன்று காலை 7.42 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 4.8-ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் தொடர்பான பாதிப்புகள் குறித்து உறுதியான தகவல் ஏதுவும் வெளியாகவில்லை, கடந்த சில வாரங்களாக வடமாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ராஜஸ்தான் மாநிலம் பிகானிரியில் நேற்று முன்தினம் அதிகாலை 5.24 மணிக்கு திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.3ஆக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர் நிலநடுக்கத்தால் அங்குள்ள பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று ஏற்பட்ட நிலநடுக்கமானது பிகானிர் பகுதியில் 110 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாக கூறப்பட்டது. இதற்கு சில மணி நேரத்திற்கு முன் மேகாலயாவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் புவியியல் மையம் தெரிவித்திருக்கிறது. மேலும் நிலநடுக்கம் தொடர்பான பாதிப்புகள் குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. நேற்று ஒரே நாளில் 3 இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. … The post இரண்டாவது நாளாக ராஜஸ்தான் மாநிலம் பிகானிரியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 4.8-ஆக பதிவு appeared first on Dinakaran.
பெண் எம்.பி தாக்கப்பட்ட விவகாரம் கெஜ்ரிவால் வீட்டில் போலீஸ் விசாரணை: பொய் புகார்: வீடியோ ஆதாரம் வெளியிட்டது ஆம்ஆத்மி
சட்டத்தை தவறாக பயன்படுத்தும் அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
விவேகானந்த ரெட்டி கொலை பற்றி கருத்து தெரிவிக்க ஒய்.எஸ்.ஷர்மிளாவுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து: உச்ச நீதிமன்றம் உத்தரவு
நிலமோசடி வழக்கில் கைது ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? மேல்முறையீட்டு மனு 21ம் தேதிக்கு ஒத்தி வைப்பு
வாக்கு பதிவு விவரங்களை விரைவாக வெளியிட கோரி வழக்கு தேர்தல் ஆணையம் ஒரு வாரத்தில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு: விசாரணை மே.24க்கு ஒத்தி வைப்பு
பாலியல் தொல்லை வழக்கில் 3 ஆண்டு தண்டனை முன்னாள் சிறப்பு டிஜிபியை கைது செய்ய தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஒவ்வொரு நாளும் முக்கியமானது ஜாமீன் மனுவை நீண்ட நாட்கள் நிலுவையில் வைக்கக்கூடாது: டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
பெண்கள் இலவச பஸ் பயணத்தை எதிர்த்த மோடி பேச்சுக்கு தலைவர்கள் கண்டனம்: மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற திட்டத்தை பொறுக்க முடியாமல் குறை கூறுவதா என விமர்சனம்
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்