விஎச்பி.க்கு புதிய தலைவர் ரபீந்திர நரேன்

புதுடெல்லி: இந்து அமைப்புகளில் ஒன்றான விஸ்வ இந்து பரிஷத்தின் தலைவராக கடந்த 2018, ஏப்ரல் முதல் விஷ்ணு சதாசிவ கோக்ஜே இருந்து வருகிறார். இவர் இந்த பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்ததால், அவருக்கு பதிலாக ரபீந்திர நரேன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இது குறித்து விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘முதுமை காரணமாக தன்னை தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கும்படி கோக்ஜே கேட்டுக் கொண்டுள்ளார். அதனால், புதிய தலைவராக ரபீந்திர நரேன் சிங் போட்டியின்றி  தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். எலும்பு சிகிச்சை மருத்துவராக பணியாற்றி வரும் இவர், கடந்த 2010ம் ஆண்டு மருத்துவத்துறையில் சிறப்பான சேவை ஆற்றியதற்காக பத்ம விருதினைப் பெற்றுள்ளார். இதேபோல், பொதுச் செயலாளரான மிலிந்த் பரண்டேவும் போட்டியின்றி தேர்வாகி இருக்கிறார்,’ என்று கூறப்பட்டுள்ளது….

The post விஎச்பி.க்கு புதிய தலைவர் ரபீந்திர நரேன் appeared first on Dinakaran.

Related Stories: