ஆண்ட்ரியாவுக்கு கோல்டன் விசா

இந்தியாவில் உள்ள செலிபிரிட்டிகளுக்கு துபாய் அரசு கோல்டன் விசா வழங்கி வருகிறது. இந்த விசா பெற்றவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் தற்காலிக குடிமகனாகக் கருதப்படுவார்கள். இதனால் எந்த விசாவும் இல்லாமல் எளிதாக எப்போது வேண்டுமானாலும் துபாய்கு சென்று வரலாம். இந்த கோல்டன் விசாவை பத்து வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பித்தல் போதுமானது.

தமிழில் இதுவரை பார்திபன், த்ரிஷா, மீனா உள்ளிட்ட பலர் இந்த விசாவை பெற்றிருக்கிறார்கள். தற்போது ஆண்ட்ரியாவுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ரியா நடிகை, இசை அமைப்பாளர், பாடகி, நடன கலைஞர் என பன்முகம் கொண்டவர் என்பதாலும் துபாய்க்கு அடிக்கடி வந்து செல்பவர் என்பதாலும் இந்த விசா அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: