காவி ஆடையில் குத்தாட்டம் ஷாருக், தீபிகா படத்தை தடை செய்ய வேண்டும்: மத்திய பிரதேச அமைச்சர் ஆவேசம்

இந்தூர்: காவி உடையில் ஆபாசமாக நடித்து இருப்பதால், நடிகர் ஷாருக்கான் – தீபிகா படுகோன் நடித்துள்ள ‘பதான் ‘ படத்தை தடை செய்ய வேண்டும் என்று மத்திய பிரதேச உள்துறை  அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா தெரிவித்துள்ளார். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவான ‘பதான்’ படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்திருக்கிறார். மேலும், ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் வரும் ஜனவரி 25ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் முதல் பாடல் ‘பேஷ்ரம் ரங்’ கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது. ஒரேநாளில் இந்தப் பாடல் 1.9 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் நீச்சல் உடையில்  தீபிகா படுகோன் படுகவர்ச்சியாக நடித்து உள்ளார். தற்போது இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தாலும், இதற்கு கடும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளார். அவர், தீபிகா படுகோனின் ‘பதான்’ படத்தின் பாடல் காட்சியில் அணிந்துள்ள உடை காவி நிறத்தில் இருப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘பாடல் காட்சியில் தீபிகா அணிந்திருக்கும் பிகினி உடையானது மிகவும் ஆட்சேபனைக்கு உரியது. இந்தப் பாடலானது அசுத்தமான மனநிலையில் படமாக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. ‘பேஷ்ரம் ரங்’ பாடலின் வரிகள் மற்றும் பாடல் காட்சிக் கான உடைகள் திருத்தப்பட வேண்டும். அவர்கள் பச்சை மற்றும் காவி நிறத்தில் ஆடைகளை திட்டமிட்டு பயன் படுத்தி இருக்கிறார்கள். இதை சரி செய்யவில்லை என்றால், மத்திய பிரதேசத்தில் இந்தப் படத்தை திரையிட அனுமதிக்கலாமா, இல்லையா என்பதை பரிசீலிக்க வேண்டியது வரும். வைஷ்ணவி தேவி கோயிலுக்கு ஷாருக்கான் செல்கிறார். ஆனால், அவரது படத்தில் நடிகையை பிகினியில் நடிக்க வைக்கிறார்’ என்று எச்சரித்துள்ளார்….

The post காவி ஆடையில் குத்தாட்டம் ஷாருக், தீபிகா படத்தை தடை செய்ய வேண்டும்: மத்திய பிரதேச அமைச்சர் ஆவேசம் appeared first on Dinakaran.

Related Stories: