குற்றக்கதையில் அதர்வா...!

தமிழில் வெளியான 100 என்ற படத்துக்குப் பிறகு அதர்வா, இயக்குனர் சாம் ஆண்டன் மீண்டும் இணையும் படம் உருவாகிறது. இதற்கு டைட்டில் முடிவாகவில்லை. மாதவன், ஸ்ரத்தா நாத், ஷிவதா நாயர் நடிப்பில் ஓடிடியில் வெளியான மாறா என்ற படத்தின் தயாரிப்பாளர் ஸ்ருதி நல்லப்பா தயாரிக்கிறார். தந்தைக்கும், மகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை மையப்படுத்தி, ஆக்‌ஷன் திரில்லர் பாணியில் இப்படம் உருவாகிறது. இதில் சண்டைக் காட்சிகளில் நடிப்பதற்காக அதர்வாவுக்கு விசேஷ பயிற்சி அளிக்கப்படுகிறது.

பின்னணி இசைக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதால், ஜிப்ரான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணன் வெங்கட் ஒளிப்பதிவு செய்கிறார். இணையவழி குற்றங்களை அடிப்படையாக வைத்து கதை எழுதப்பட்டுள்ளது. இதற்கு முன் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான டார்லிங், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, யோகி பாபு நடிப்பில் வெளியான கூர்கா ஆகிய படங்களை சாம் ஆண்டன் இயக்கியுள்ளார்.

Related Stories: