ஹிரித்திக் ரோஷனுக்கு இ-மெயில் அனுப்பிய விவகாரத்தில், அவர் எப்போது தனது அழுகையை நிறுத்துவார் என்று அவரது முன்னாள் காதலி கங்கனா கேட்டுள்ளார். இந்தி நடிகர் ஹிரித்திக் ரோஷன் தனது முன்னாள் காதலர் என்றும், காதலை வெளியில் சொல்லாமல் ரகசியமாக வைக்கச் சொல்லியதால் அவரை விட்டு விலகியதாக கடந்தாண்டு பாலிவுட் நடிகை கங்கனா கூறியிருந்தார். இதற்கு முன்னதாக. கடந்த 2013-14ம் ஆண்டுகளில், கங்கனாவின் இ-மெயிலில் இருந்து நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள், அவரது முன்னாள் காதலரான ஹிரித்திக் ரோஷனுக்கு அனுப்பப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஹிரித்திக் ரோஷன் 2017ல் மும்பை போலீசில் கங்கனா மீது புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் அடையாளம் தெரியாத நபர்கள் என சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது கங்கனா தரப்பில், ‘எனது மின்னஞ்சல் ஐடி ஹேக் செய்யப்பட்டது. நான் ஹிரித்திக் ரோஷனுக்கு எந்த மின்னஞ்சலும் அனுப்பவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டது.