×

மீண்டும் படம் இயக்குவது எப்போது?

இயக்குனராக இருந்தபோது, ஒரு படத்தை முடித்த பிறகே அடுத்த படத்தை பற்றி யோசிப்பது சசிகுமார் வழக்கம். இப்போது ஹீரோவாகி விட்டதால், கடகடவென்று பல படங்களில் நடித்து முடித்துள்ளார். அவரது நடிப்பில் ராஜவம்சம், கொம்பு வச்ச சிங்கம்டா, எம்.ஜி.ஆர் மகன், கத்துக்குட்டி சரவணன் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் என, 4 படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இதற்கிடையே நாநா என்ற படத்திலும், முந்தானை முடிச்சு ரீமேக்கிலும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுகுறித்து சசிகுமார் கூறுகையில், ‘கொரோனா லாக்டவுனுக்கு முன்பே அனைத்து படங்களிலும் நடித்துவிட்டேன். டப்பிங் பணிகளும் முடிந்தது. சரவணன் இயக்கத்தில் ஜோதிகாவுடன் நடித்துள்ள படத்துக்கு டைட்டில் முடிவாகவில்லை’ என்றார். தற்போது நடிப்பில் பிசியாக இருப்பதால், மீண்டும் படம் இயக்குவது பற்றி முடிவு செய்யவில்லையாம்.

Tags :
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!