சினிமாவில் நடித்துக்கொண்டே ஆன்மிக விஷயங்களில் ஈடுபடும் சில நடிகைகள் வரிசையில் சேர்ந்துள்ளார், சஞ்சிதா ஷெட்டி. தினமும் டயட் உணவு வகைகளை மட்டுமே எடுத்துக்கொள்ளும் அவர், இயற்கையுடன் இணைந்து வாழும் உத்திகளை கற்று வருகிறார். மேலும், ஆன்மிக விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டி, தனக்கு நெருக்கமானவர்களுக்கு யோகாசனம் மற்றும் தியான முறைகள் பற்றி விளக்கம் அளிக்கிறார். முன்பு போல் சினிமா துறை சம்பந்தப்பட்ட விருந்து நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பதில்லை. தத்துவ நூல்கள் படிக்கிறார். ஆன்மிகத்தில் சந்தேகம் ஏற்படுபவர்களுக்கு உரிய விளக்கம் சொல்கிறார். தனக்கு பொருத்தமான கேரக்டர் கிடைக்கும்போது, மீண்டும் சினிமாவில் நடிக்க வருவார் என்று தெரிகிறது.