வேகமாக வளர்ந்து வரும் இளம் நடிகை ராஷிகா பந்தனா. தெலுங்கு, கன்னட சினிமாவில் முன்னணியில் இருக்கும் அவர் தமிழ், தெலுங்கில் தயாரான காமிரேட் படத்தில் நடித்திருந்தார். தற்போது சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். கொரோனா காலத்தில் தான் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் மேலும் கூறியிருப்பதாவது: நாம் பல விஷயங்களில் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறோம். நம்மை பற்றி, நண்பர்களை பற்றி, அல்லது மற்றவர்கள் பற்றியோ கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நான் அதிக எடை கூடி விட்டேனா, அல்லது மிகவும் ஒல்லி ஆகிவிட்டேனா என்று மற்றவர்களிடம் கேட்டு நம்மை உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கிறோம்.