சென்னை: கனடாவில் தங்கியுள்ள நடிகர் விஜய்யின் மகன் பற்றி நலம் விசாரித்தார் நடிகர் அஜித். விஜய் மகன் சஞ்சய், படிப்பை முடித்துவிட்டு, குறும்படங்கள் இயக்கி வந்தார். இந்நிலையில், சினிமா தொடர்பான படிப்புக்காக அவர் கனடாவுக்கு சென்றார். இதற்கிடையே கொரோனா தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் கனடாவில் இருந்து சஞ்சய் நாடு திரும்ப முடியவில்லை. இதை நினைத்து விஜய் கவலை அடைந்தார். தினமும் மகனிடம் பேசி அவைர தனிமையில் இருக்குமாறும், வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவு றுத்தி வருகிறார்.