×

சுயமரியாதையை இழக்க மாட்டேன்; பட அதிபருக்கு நடிகை பதிலடி

தனுஷ் ஜோடியாக பட்டாஸ் படத்தில் நடித்தவர் நடிகை மெஹரின். சமீபத்தில் தெலுங்கில் வெளியான அஸ்வத்தாமா பட புரமோஷனில் பங்கேற்காததால் மெஹரீனுக்கும் அப்பட தயாரிப்பாளருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த தயாரிப்பாளர், புரமோஷனுக்கு வராவிட்டால் நீங்கள் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு நான் வாடகை தரமாட்டேன் என்றார். இதையடுத்து யாரிடமும் சொல்லாமல் ஓட்டலிலிருந்து வெளியேறினார் மெஹரீன்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டல் நிர்வாகம், தயாரிப்பாளரிடம் பணம் கேட்டு பிரச்னை செய்தது. நீண்ட இழுபறிக்கு பின்னர் தயாரிப்பாளர் வாடகை பணத்தை செலுத்தினார். இந்த விவகாரத்தில் தன் மீது தவறான தகவல் பரப்பப்பட்டிருப்பதாக மெஹரீன் கூறியிருக்கிறார். இதுபற்றி அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்,’பெண்களுக்கு அதிகாரமளித்தல் பற்றி படங்கள் எடுக்கப்படுகின்றன.

ஆனால் நிஜத்தில் அவர்களை இழிவுபடுத்தும் செயல்கள் நடப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது. எனது சுய மரியாதைக்கும், கவுரவத்துக்கும் இழுக்கு வரும் நிலை ஏற்பட்டபோது என் பக்கம் நான் நின்றேன். இருபக்கமும் தொழில் பக்தி இருக்க வேண்டும் என நம்புபவள் நான். எந்த ஒருவரின் தனிப்பட்ட விஷயத்திலும் அவர்களுக்கான இடத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். உங்கள் எல்லோரையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும்’ என யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் காட்டமாக பதில் அளித்திருக்கிறார் மெஹரீன்.

Tags : Actress ,president ,
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...