×

ரஹ்மானுக்கு எரிச்சல் ஏற்படுத்தியது யார்?

பழைய பாடல்கள் அவ்வப்போது ரீமிக்ஸ் செய்யப்பட்டு படங்களில் இடம்பெறுகிறது. எம்ஜிஆர் நடித்த ‘தொட்டால் பூ மலரும்’ பாடல் எஸ்.ஜே.சூர்யாவின் ‘நியூ’ படத்துக் காக ஏ.ஆர்.ரஹ்மான் ரீமிக்ஸ் செய்தார். அடுத்து விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படத்துக்காக சிவாஜி நடித்த சொர்க்கம் படத்தில் இடம்பெற்ற ’பொன்மகள் வந்தாள்’ பாடலை ரீமேக் செய்தார்.

பிற இசை அமைப்பாளர்களின் பாடலை ரீமிக்ஸ் செய்த ரஹ்மானுக்கு அவரது பாடலையே ரீமிக்ஸ் செய்ய வேண்டிய நிலை உருவானது. மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, மனிஷா கொய்ராலா நடித்த ’பம்பாய்’ படத்தில் இடம்பெற்ற ‘அந்த அரபிக் கடலோரம்’ பாடலை துல்கர் சல்மான், நித்யாமேனன் நடிக்க மணிரத்னம் இயக்கிய ‘ஓ கே கண்மணி’ படத்துக்காக ரீமிக்ஸ் செய்தார்.

பிரபுதேவா நடித்த ‘காதலன்’ படத்தில் இடம்பெற்ற முக்காலா முக்காபுலா பாடலை ரீமிக்ஸ் உரிமையை பிரபுதேவா நடிக்கும் ’ஸ்ட்ரீட் டான்ஸர்’ இந்தி படத்திற்காக  தந்தார் ஏஆர் ரஹ்மான். பாடல்கள் ரீமிக்ஸ் குறித்து ரஹ்மானிடம் கேட்டபோது,’தன்னுடைய பாடலை தானே ரீமிக்ஸ் செய்வது எரிச்சலான விஷயம், புதிய பாடல்களுக்கு இசை அமைக்கவே ஆர்வம் உள்ளது’ என தெரிவித்தார்.

Tags : Rahman ,
× RELATED ஷகிரா மாதிரி யோசி… பியான்சே போல பாடு!