சந்தானம், வைபவி சாண்டில்யா நடித்து இருக்கும் படம், சர்வர் சுந்தரம். ஆனந்த் பால்கி இயக்கியுள்ளார். அவர் கூறுகையில், ‘இதுவரை இப்படியொரு கதையுடன் எந்த படமும் வந்ததில்லை. நான் ஓட்டல் மேனேஜ்மெண்ட் ஸ்டூடண்ட் என்பதால்தான், இந்த கதையை மிக ஆழமாக யோசித்து எழுத முடிந்தது. மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு காற்று, உணவு, நீர் ஆகியவை அவசியம். இதில் சாப்பாட்டை மட்டும் மையப்படுத்தி சந்தானத்திடம் ஒரு கதை சொன்னேன்.