திரையரங்குகளில் முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் வெளிவரும் போது, வழக்கமான கட்டணத்தை விட பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பல ஆண்டுகளாக புகார் வந்து கொண்டு இருக்கிறது. இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்பனை செய்யும் திட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியிருந்தார்.