துருவங்கள் பதினாறு படத்துக்கு பிறகு நரகாசூரன் படத்தை இயக்கி முடித்தார் கார்த்திக் நரேன். அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா, இந்திரஜித் நடித்துள்ள இந்த படம் பைனான்ஸ் பிரச்னை காரணமாக திரைக்கு வராமல் உள்ளது. இந்நிலையில் தனது அடுத்த படத்தை பார்த்திபன் நடிப்பில் நாடக மேடை என்ற பெயரில் படமாக்க இருப்பதாக கார்த்திக் நரேன் அறிவித்து இருந்தார்.