கார்த்திக் நரேனின் மாஃபியா

துருவங்கள் பதினாறு படத்துக்கு பிறகு நரகாசூரன் படத்தை இயக்கி முடித்தார் கார்த்திக் நரேன். அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா, இந்திரஜித் நடித்துள்ள இந்த படம் பைனான்ஸ் பிரச்னை காரணமாக திரைக்கு வராமல் உள்ளது. இந்நிலையில் தனது அடுத்த படத்தை பார்த்திபன் நடிப்பில் நாடக மேடை என்ற பெயரில் படமாக்க இருப்பதாக கார்த்திக் நரேன் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் அந்த பட திட்டத்தை ஒத்திவைத்திருக்கிறார். இப்போது அருண் விஜய் நடிப்பில் மாஃபியா என்ற படத்தை அவர் இயக்க உள்ளார். இதில் ஹீரோயினாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். கேங்ஸ்டர்கள் கதை படமாக இந்த படம் உருவாக உள்ளது.

Related Stories: