ஒரு பாட்டில் அயோடினுடன் அவர் மும்பையில் உள்ள பிரபல உணவகங்களான விராட் கோலியின் ஒன்8 கம்யூன், ஷில்பா ஷெட்டியின் பாஸ்டியன், பாபி தியோலின் சம்ப்ளேஸ் எல்ஸ் போன்றவற்றுக்குச் செல்கிறார். இங்கிருந்து பெறப்பட்ட பனீர் மாதிரிகளில் அயோடின் சோதனையில் கருப்பு நிறம் தோன்றவில்லை. ஷாருக்கானின் டோரி எனும் உணவகத்தில்ல் சச்தேவ் இதே சோதனையை மேற்கொண்டபோது, அயோடின் கருப்பு நிறமாக மாறியது. இதனால், ஷாருக்கானின் உணவகத்தில் வழங்கப்பட்ட பனீர் போலியானது என்பது நிரூபணமானதாக யூடியூபர் அறிவித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக மும்பை மாநகராட்சி சுகாதாரத்துறை விசாரிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
