ஏஐ டெக்னாலஜி ஆதிக்கத்தால் இசை அழிந்துவிடாது: சாம் சி.எஸ் நம்பிக்கை

சென்னை: இந்தியாவிலுள்ள பல்வேறு மொழிப் படங்களுக்கு இசை மற்றும் பின்னணி இசை அமைத்து வரும் சாம் சி.எஸ்., தற்போது பாடல்கள் எழுதுவது, பின்னணி பாடுவது, புத்தகம் எழுதுவது என்று தன்னை மிகவும் பிசியாக வைத்துள்ளார். அவரது இசையில் ‘ரெட்ட தல’ என்ற அருண் விஜய் நடித்த படமும், ‘விருஷபா’ என்ற மோகன்லால் நடித்த பான் இந்தியா படமும் நாளை (25ம் தேதி) திரைக்கு வருகிறது. இதுகுறித்து அவர் கூறியதாவது:

இரட்டை வேடங்களில் அருண் விஜய் நடித்துள்ள ‘ரெட்ட தல’ என்ற படத்துக்காக, இதுவரை எந்த படத்துக்கும் இல்லாத அளவுக்கு கடினமாக உழைத்​திருக்​கிறேன். இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும். தனுஷ் பாடியுள்ள ஒரு பாடல் வைரலாகி விட்டது. அருண் விஜய் நடித்​துள்ள இரண்டு கேரக்​டர்​களுக்​கும் வித்​தி​யாச​மான முறையில் இசை அமைத்​துள்ளேன்.

சித்தி இத்னானியின் ​கேரக்டருக்கு அதிக முக்​கி​யத்​து​வம் இருக்கும். ‘சர்​தார் 2’, ஹெச்​.​வினோத் இயக்​கத்​தில் தனுஷ் நடிக்​கும் படம், கன்​னடத்​தில் ஒரு படம், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மாதவன், கங்​கனா ரனவத் நடிக்​கும் பான் இந்​தியா படம் உள்பட சுமார் 15 படங்​களுக்கு இசை அமைத்து வரு​கிறேன். இசைத்​துறை​யில் ஏஐ டெக்​னாலஜி அதிக ஆதிக்​கம் செலுத்​தி​வருகிறது.

அது ஒன்றும் தவறு இல்லை. அதனால் இசை அழிந்துவிடாது. ‘மகாவ​தார் நரசிம்​மா’ என்ற பான் இந்தியா அனிமேஷன் படத்​துக்கு நான் இசை அமைத்த பின்பு, நிறைய பக்தி படங்​களுக்கு இசை அமைக்க வாய்ப்​பு​கள் வருகிறது. ஐயப்​பன் பாடல் ஒன்றை எழுதி இசை அமைத்​துள்​ளேன். என்னை நடிக்க கேட்கிறார்கள். தற்போது அதில் எனக்கு ஆர்வம் இல்லை.

Related Stories: