ேதசிய கொடி விவகாரம்: சபாநாயகர் அப்பாவு வேதனை

சென்னை: கனடாவில் கடந்த மாதம் 65வது காமன்வெல்த் நாடாளுமன்ற சபாநாயகர்கள் மாநாடு நடந்தது. இதில், இந்தியா சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு உள்பட பல்வேறு மாநில சபாநாயகர்கள் கலந்து கொண்டனர். மாநாடு முடிந்து நேற்று சென்னை விமான நிலையத்துக்கு சபாநாயகர் அப்பாவு வந்தார்.அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கனடாவில் நடந்த சபாநாயகர்கள் மாநாட்டில் பயன்படுத்தப்பட்ட தேசியக்கொடி, இந்திய ஒன்றிய அரசின் அனுமதியோடு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. தற்போது எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தில் கொல்லப்பட்ட 20 இந்திய வீரர்களது கல்லறையின் ஈரம் காய்வதற்குள், சீனாவில் இருந்து இந்திய தேசியக்கொடிகளை இறக்குமதி செய்து, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா உள்பட நாங்கள் அனைவரும் அவற்றை ஏந்தி சென்றது வேதனை அளிக்கிறது. …

The post ேதசிய கொடி விவகாரம்: சபாநாயகர் அப்பாவு வேதனை appeared first on Dinakaran.

Related Stories: