மேலும் இளையராஜா பவதாரிணி பற்றிய தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டதுடன் பவதாரிணி இதுவரை பாடிய பாடல்களை தனது இசைக்குழு மூலமாக இசைக்க செய்தார். இந்த நிகழ்வில் இசையமைப்பாளர் இயக்குனருமான கங்கை அமரன், இயக்குனர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, கவிஞர் சினேகன், தயாரிப்பாளர் டி.சிவா, ஜெ .எம். பஷீர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பவதாரிணிக்கு தங்களது நினைவஞ்சலியை செலுத்தினர். கவிஞர் சினேகன் பேசும்போது, ‘‘இசைஞானி இளையராஜா எதையுமே பெரிதாக வெளிகாட்டி கொள்ள மாட்டார். என்றாலும் பவதாரணி மீது அந்த ஆகாயம் அளவிற்கு அன்பை மனதிற்குள் வைத்திருப்பார்’ என்றார்.