முரளி கோபி ஸ்கிரிப்ட் எழுத, தீபக் தேவ் இசை அமைத்துள்ளார். சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிருத்விராஜ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு வடிவமைப்பு செய்துள்ளது. ஆண்டனி பெரும்பாவூரின் ஆசீர்வாத் சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ளது. வரும் மார்ச் 27ம் தேதி ஐந்து மொழிகளில் இப்படம் திரைக்கு வருகிறது. வடக்கு ஈராக்கில் கைவிடப்பட்ட காரகோஷ் என்ற நகரில் இக்கதை தொடங்குகிறது. ஸ்டீவன் நெடும்பள்ளி என்ற கேரக்டர், ஆசியாவின் சக்தி வாய்ந்த கூலிப்படை தலைவன் அபிராம் குரேஷியை அறிமுகப்படுத்துகிறது. அரசியல் மற்றும் கூலிப்படை உலகில் காணப்படும் அதிகாரம், துரோகம் மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றை மோகன்லால் எப்படி கையாண்டு வெற்றிபெறுகிறார் என்பது கதை என்று படக்குழு தெரிவித்தது.
