புகார் அளித்துவிட்டு வந்த மாதவி லதா கூறும்போது, ‘பிரபாகர் ரெட்டி மன்னிப்பு கேட்டுவிட்டாரே என்கிறீர்கள். அதனால் அவர் சொன்னதெல்லாம் இல்லை என்று ஆகிவிடுமா? அவர் மன்னிப்பு கேட்டிருக்கலாம். ஆனால் நான் அவரை மன்னிக்கவில்லை. மறக்கவும் இல்லை. அவரது பேச்சால், நானும் எனது குடும்பத்தாரும் கடும் மன உளைச்சலுக்கு ஆளானோம். எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக அவர் பேசியிருக்கிறார். அவர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவேன்’ என தெரிவித்தார். முன்னதாக நடிகைகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வாழ்க்கை நடத்துகிறார்கள் என பேசியிருந்த பிரபாகர் ரெட்டி, மாதவி லதாவை குறிப்பிட்டு இந்த கருத்தை கூறியிருந்தார். அவரது பேச்சு, சினிமா வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.